Monday, November 22, 2010

யோகியின் டைரி குறிப்பு

இப்பொழுது அதிகமாக கூகுள் பஸ்ஸில் கும்மி அடித்துகொண்டிருக்கிறேன். கும்மியின் ஊடே நான் கற்ற யோகா சம்பந்தமான விசயங்களை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன். நான் சந்தித்த யோகியின் அனுபவத்தை சிறு குறிப்புகளாக  தொடராக எழுதி கொண்டிருக்கிறேன்.  யோகா மற்றும் யோகா சம்பந்தமான பயிற்சிகளில் விருப்பம் உடையவர்கள் கூகுள் பஸ்ஸில் என்னுடன் பயணிக்கலாம்.ஆரோக்கியமாக விவாதிக்கலாம். என்னுடைய பஸ் முகவரி 

http://www.google.com/profiles/110320395747310358744#buzz 



நான் யோக வித்தை சொலி தரேன் கத்துக்கிறியா?

ஐயா நானா, எனக்கு எல்லா கெட்ட பழக்கமும் உண்டு தண்ணி அடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நான் வெஜ் சாப்பிடுவேன்,
யோகா பண்ணனும்னா இதெல்லாம் செய்யகூடாது இல்ல? நான் எப்படி?

எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவனுக்கு யோகா எதுக்கு? உன்ன மாதிரி ஆளுங்களுக்கு தான் தேவை. நான் சொல்லி குடுக்கிற வித்தைகள தொடர்ந்து செய். ஒருநாள் அந்த பழக்கத்தை எல்லாம் விடணும்னு உனக்கே தோணும்..வர்ற ஞாயிற்று கிழமை காலைல நாலு மணிக்கு என் வீட்டுக்கு வா. நாம அன்னிக்கு பாடத்த ஆரம்பிக்கலாம்.

இந்த கிழவனை நம்பி போகலாமா? ---------(1)

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணி. அந்த கிழவரின் வீட்டில் இருந்தேன். தர்ப்பையால் ஆன பாயை எடுத்து விரித்து அதில் அமர சொன்னார். அருகில் இருந்த விளக்கை ஏற்றிவிட்டு எதிரில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

நான் சில பேருக்குதான் இந்த யோகா வித்தையை கத்து கொடுத்திருக்கேன். இப்ப அது உனக்கு கிடைக்க போகுது. ரெம்ப கவனமா நான் சொல்லி கொடுகிறத கத்துக்க.உன் வாழ்கை முறையே மாறப்போகுது என் நெற்றிப்பொட்டில் விரலை வைத்து அழுத்தி, மாற்றி மூச்சு விடும் முறையை கூறினார். நான் சொல்ற வரை இந்த முறைல மூச்சு விடு.

நான்,ஐயா ஒரு சந்தேகம்.

வாய மூடு, நான் சொன்னத மட்டும் செய். வேற எதுவும் பேசக்கூடாது.

மூச்சுப்பயிற்சி தொடர்ந்தது.எப்பொழுதோ படித்த விஷயங்கள் ஞாபகம் வந்தது.
எதன் மேல் அமர்ந்து பயிற்சித்தால் என்ன பலன்?

மூங்கில் கீற்று - வறுமை
கல் - வியாதி
மண் - தூக்கம்
உடைந்த அல்லது அறுபட்ட பலகை மனை - நன்மை இல்லை
கோரை போன்ற புற்கள் - கீர்த்திநாசம்
பச்சிலை மன நடுக்கம் .
புலித்தோல் - செல்வம்
தர்பாசனம் - மோட்சம்
வெள்ளை வஸ்திரம் - தீமை இல்லை
சித்திராசனம் அல்லது இரத்தின கம்பளம் - நன்மை

தர்ப்பாசனத்தில் அமர்ந்து பயிற்சி செய்கிறேன்.

நான் மோட்சம் அடைவேனா --------(2)




Monday, November 1, 2010

சின்ன சின்ன (Buzz collection)

கஸ்டமருக்கு நான் அனுப்பிய மெயில்.
Dear sir,
           Kindly refer the attached html mail.Already we have picked up the equipments from your place.
regards,
RG.
அனுப்பிய கொஞ்ச நேரத்தில் கஷ்டமரிடம் இருந்து போன்.
சார் அட்டாச்மென்ட் எதுவும் இல்லையே?
இல்ல சார், ஒரு html file இருக்குமே?
அது இருக்கு ஆனா attachment எதுவும் இல்லையே?
இல்ல சார், அந்த html fila IEல ஓபன் பண்ணுங்க.
ஓ சரி சரி..
பேசியவர் IT மேனேஜர்
ஒரு வேளை அட்டாச்மெண்டா நானே  குத்துகாலிட்டு உட்கார்ந்திருப்பேன்னு எதிர்பார்த்தாரோ என்னமோ..


****
நண்பர் குடுத்தாரென்று இறைஅன்பு எழுதிய "சாகாவரம்" நாவல் வாசித்து கொண்டிருக்கிறேன். இது அவரின் இரண்டாவது நாவலாம். மரணத்தை பற்றிய கேள்விகளோடு நகர்கிறது. அடுத்தடுத்து அறிமுகமாகும் கேரக்டர்கள் உடனுக்குடனே இறந்து விடுகிறார்கள். படிக்கும்போதே நானும் மண்டையை போட்டு விடுவேனோ என்று மரண பயம் ஏற்படுகிறது.

*********
தூக்கத்தில் முழித்து, மறுபடியும் தூங்க தொடங்குவதின் மூலம் கனவினை விட்ட இடத்தில இருந்து தொடர முடியுமா?!
**** 
"பரத்தை கூற்று " புத்தக வெளியீடுக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். காற்று புக இடம் இல்லாமல் வேர்த்து வழிந்து கொண்டிருந்தது. எனக்கு முன் நின்று கொண்டிருந்தவர் சாருவின் பேச்சை சுவாரசியமாய் கேட்டு கொண்டிருந்தார். சாரு, " இப்ப ஒரு புத்தகம் எழுதி கொண்டுருக்கிறேன், அது என் வாழ்கையில் இரண்டு வருடம் ஆண் விபச்சாரியாய் இருக்கும்பொழுது நடந்த சம்பவங்களை பற்றியது*" என்றவுடன், எனக்கு முன் நின்றிருந்தவர் கெக்கேபிக்கே என்று சிரித்து இறங்கி ஓடிவிட்டார்.
 
***** எதிலோ  படித்தது.ஆபிசில் இருந்து வீடு திரும்பிய கணவன் திடுக்கிட்டான். தெருப்புழுதியில் அவனுடைய பிள்ளை புரண்டு விளையாடிக்கொண்டிருந்தான். வாசல் கதவு திறந்து கிடந்தது. பீரோ கதவும்தான். அடுப்பில் எதுவோ தீய்ந்து கொண்டிருந்தது. குழாய் மூடப்படாததால் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. டைனிங் மேஜை மீது டிபன் பாத்திரங்கள் சாப்பிட்ட மீதியுடன் கிடந்தது. மேஜை விளக்கு கவிழ்ந்து விழுந்திருந்தது. டிவீ பயங்கரமாய் அலறிக்கொண்டிருந்தது. ப்ரிட்ஜ் கதவு திறந்திருக்க டப்பாக்கள் கொட்டி இருந்தன. வாஷ் பேசினில் சோப்பு பெட்டி தண்ணீரில் ஊறிக் கொண்டிருந்தது.
உள்ளே போனான். படுக்கையில் அவனுடைய மனைவி உல்லாசமாய் சாய்ந்து கொண்டு சாவகாசமாய் ஒரு கதைப்புத்தகத்தை படித்து கொண்டிருந்தாள். கணவனை கண்டதும் புன்னகை செய்தாள்.
அவனுக்கு ஒரே ஆத்திரம். என்ன ஆச்சு இன்று? என்று கத்தினான்.
ஒன்றும் ஆகவில்லை. தினம் ஆபிசில் இருந்து வந்ததும் " நாள் பூரா இன்னிக்கு என்னதான் பண்ணினே ? என்று நீங்க கேப்பீங்க இல்லையா? என்றால் அவள்.
சரி.
"இன்றைக்கு நான் அத பண்ணலை" என்று பதில் வந்தது.
 
**** கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு,பழைய தோழியை பார்க்க போயிருந்தேன்.
சமீபத்தில் தாயாகி இருந்தாள். ஏதேதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ஏய் உனக்கும் பெண் குழந்தை எனக்கும் பெண் குழந்தை,உன் குழந்தையும் வெள்ளி கிழமைதான் பொறந்துச்சு என் குழந்தையும் வெள்ளி கிழமைதான் பொறந்துச்சு என்றாள்.

ஹூம்.. நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது
  ******