Saturday, August 7, 2010

பதிவுலகில் நான் கடவுள்....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
எறும்பு.
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை என்னை எல்லோரும் ராஜகோபால் என்று அழைப்பார்கள். தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது. பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி, எறும்புன்னு பேரு வச்சாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வருதான்னு சோதிச்சு பார்த்தேன். சட்டில இருந்தாதான் அகப்பைல வருமாம்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
கொஞ்ச வருசங்களுக்கு முந்தி, பிரபல பதிவரான சாரு நிவேதாவின் தளத்தை மட்டும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒருநாள் ஜெயமோகனை கிண்டல் செய்து மடிப்பாக்கம் (லக்கி லுக் )தளத்தின் லிங்கை வெளியிட்டு இருந்தார். அப்படியே போய் தேடி தேடி டமில் பதிவுலகை கண்டு கொண்டேன். முன்பு ராஜகோபால் என்ற பெயரிலையே கமெண்ட் இட்டு கொண்டிருந்தேன் எறும்பு தளத்தை ஆரம்பிக்கும் வரை அதாவது உங்களுக்கு சனி திசை ஆரம்பிக்கும் வரை. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நிறைய கமெண்ட் இட்டேன். பதிவர் சந்திப்புக்கு செல்ல ஆரம்பித்தேன். எதையாவது கிறுக்கி பதிவேற்றியவுடன் சில பிரபல பதிவர்களுக்கு லிங்க் அனுப்புவது உண்டு. அது எந்த அளவுக்கு உதவியது என்று தெரியவில்லை. சுருக்கமாக எல்லாம் செய்தேன் உருப்படியாக எழுதுவதை தவிர.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இல்லை .சில விசயங்களில் ரிஸ்க் எடுப்பது உண்டு. ஆனால் என் மனைவியும் என் பதிவை படிப்பதால் உயிருக்கு பயந்து இந்த ரிஸ்க் மட்டும் எடுப்பது இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
அப்படியே எழுதி பணம் சம்பாதிசுட்டாலும். நண்பர்களை சம்பாதிக்க மட்டும் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இப்போதைக்கு ஒண்ணுதான் இருக்கு. முன்பு ராம்சைதன்யா என்ற பெயரில் ப்ளாக் கடை ஆரம்பித்து ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை தமிழில் வெளியிட்டு கொண்டிருந்தேன். பிறகு தனியாக டீ ஆற்ற பயமாக இருந்ததால் அந்த கடையை மூடிவிட்டேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபமா, பொறாமையா பதிவர்கள் மீதா?!. எல்லோருமே தெய்வங்கள். அந்த தெய்வங்களுடன் சேர்ந்து நானும் கடவுளாக முயற்சித்து கொண்டிருக்கிறேன். அகம் பிரம்மாஸ்மி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
அனைத்தையும் கூறி, எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சுக்கிட்டு பின்னாடி நமக்குள்ள பிரச்சனை வந்தா சொற்சித்திரம் வரைவீங்க. அதுக்கு நான் ஆளு இல்லை.
பிம்பிளிகி பிளாப்பி. மாமா பிஸ்கோத்து.


***********