Thursday, March 25, 2010

செல்பேசி அபாயம்..


சமீபத்தில் நண்பர் ஒருவரின் உறவினர் பெண்ணின் மொபைலுக்கு  குறிப்பிட்ட நம்பரிலிருந்து ஆபாச மெசேஜ்கள் வர துவங்கியது. திருப்பி அந்த நம்பருக்கு கால் பண்ணினால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கும். நாளாக நாளாக இந்த தொல்லை அதிகரித்தது. அந்த பெண் அணிந்திருக்கும் உடையின் நிறத்தை குறிப்பிட்டும், அந்த பெண்ணின் அன்றைய அலங்காரத்தை குறிப்பிட்டும் மெசேஜ் வர ஆரம்பித்தது.எவனோ தெரிந்த ஒருவனோ அல்லது வீட்டுக்கு அருகில் இருப்பவனோதான் இந்த வேலையை செய்கிறான் என்ற முடிவுக்கு வந்தார்கள். எதிர் வீட்டுக்காரனுடன் முன்விரோதம் உண்டு. அவனாக கூட இருக்கலாம் என்று எண்ணினார்கள். பின்பு  ஒரு நண்பரின் உதவியுடன் அந்த செல்பேசி நம்பரின் விலாசத்தை , அந்த செல்பேசி நிறுவனத்திடம் இருந்து வாங்கினார்கள். அந்த முகவரி அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மற்றொரு ஊரில் உள்ளவரின் முகவரி. அங்கு சென்று விசாரித்ததில் அந்த நபர் ஒரு சித்தாள் வேலை பார்ப்பவர். சில மாதங்களுக்கு முன்பே அவரின் செல் போனை தொலைத்திருக்கிறார். தொலைந்த அவரின் நம்பரை முடக்கம்  செய்வதை பற்றிய வழிமுறைகள் எதுவும் தெரியாததால், தொலைந்த அவரின் செல்பேசியை பற்றிய எண்ணத்தை அவர் குழைக்கும் சிமிண்டின் ஊடாக வைத்து பூசிவிட்டு புது எண்ணும் செல்பேசியும் வாங்கிவிட்டார்.

இது வேலைக்கு ஆவாது என்று உணர்ந்த அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சும்மா சொல்லகூடாது நம்ம சைபர் க்ரைம், ரெண்டே நாளில் மெசேஜ் அனுப்பிய கயவாளிப்பயலை கொத்தாக அள்ளிவந்துவிட்டார்கள். 

அந்த நல்லவன், அந்த பெண் குடி இருக்கும் தெருவிலேயே செல் ரீ சார்ஜ் கடை நடத்துபவன். இந்தப்பெண் அந்த கடையில் தான்  ரீ சார்ஜ் செய்வாள். சும்மா கிடைத்த சித்தாளின் போனை வைத்து விளையாடி இருக்கிறான். ஆபாச மெசேஜ் அனுப்பிவிட்டு போனை ஆப் செய்து அடுத்த சிம்மை அதே போனில் போட்ட போது அந்த நம்பரை வைத்து அவனை தூக்கி வந்து விட்டார்கள்.

காவல் நிலையத்தில் வைத்து அவனை பிதுக்கியத்தில், இனி அவன் அம்மாவுக்கு மெசேஜ் அனுப்புவது கூட சந்தேகம்தான்.

இஸ்கூலுக்கு போகும் பிள்ளைகளே செல்பேசி கொண்டு போகும் காலம் இது. SMS, MMS வடிவில் அவர்களை தட்டி வீழ்த்த நிறைய பேர் அலைகிறார்கள். வளைத்து போட நினைப்பவர்களும் வக்கிரம் பிடித்தவர்களும் உண்டு.  நமக்குதான் ஏகப்பட்ட வேலை ஆனால் பொண்ணுங்களை கரெக்ட் பண்ண நினைக்கிற ஆளுங்களுக்கு அதுதான்  வேலையே. உஷாருங்கோ..

"ISSUED IN PUBLIC INTEREST " Use mobile Save paper - What an IDEA..



*************************

Saturday, March 20, 2010

லீனா மணிமேகலை, சாரு,பதிவர் அப்துல்லா - ஜூவீ பேட்டி

சும்மா ஒரு பொது அறிவுக்கு படிச்சு தெரிஞ்சுக்குங்க...

எப்படியும் கூகிள் உதவியுடன் தேடுவீங்க.. எதுக்கு சிரமம்.அந்த கவிதைய படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இங்கு செல்லவும். 

Monday, March 15, 2010

நித்திய ஆனந்தம்..



என்னுடைய இத்தனை வருட ஆன்மீக தேடலில் நிறைய ஆசிரமங்களையும் சாமியார்களையும் சந்திதாயிற்று. பெரும்பாலானவற்றில், ஆசனம் த்யானம் என்று நல்லபடியாக ஆரம்பித்து ஒருவரை காட்டி இவரை கும்பிடு, இவரை மட்டுமே கும்பிடு என்ற நிலைக்கு தள்ளி விடுகிறார்கள். அதைவிட சொல்லி தரும் ஆச்சார்யர்களின் ஈகோ நம்மளை ஆச்சர்யப்படுத்தும். என்ன இத்தனை வருஷம் சந்நியாசியா இருக்கேன்னு சொல்றாங்க இன்னும் ஈகோவை விடலியா என்று எண்ணத்தோன்றும்.

ஆனால் சந்நியாசி என்பவனும் சராசரி மனிதனே. அவர்களுக்கு உள்ளும் கர்வம் உண்டு காமம் உண்டு. மனதில் உள்ள அழுக்குகளை களைந்து பூரணம் ஆவதற்கு பிரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டும்.நிறையவே மன திடம் வேண்டும்.காவி உடை அணிந்தவர்கள் அனைவரும் சந்நியாசி இல்லை. ஆசிரமத்தில் சிறு பிரச்சினைக்கு அடித்து கொண்ட சன்யாசிகளை பார்த்திருக்கிறேன்.சன்னியாசி ஆன பிறகும் சன்யாசம் துறந்து இல்லறத்தில் நுழைந்தவர்களையும் தெரியும்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சன்யாசம் என்பது ஒரு "Attitude". பற்றற்ற மனோ நிலை. அந்த நிலையில் இருக்க காவி உடுத்தனுமுன்னு அவசியம் இல்லை. ஒரு குடும்பஸ்தனாக இருந்து கொண்டே அந்த நிலையில் இருக்கலாம். இதற்கு நம்முடைய புராணத்தில் நிறைய கதைகள் உண்டு (தேடி படிங்க). 

கீழே உள்ளது ஒரு குருவுக்கும் சீடனுக்கும் நடந்த உரையாடல்.
(தேவை ஆனதை மட்டும் எழுதுகிறேன்).யார் அந்த குருன்னு கேக்காதிங்க. சொன்னாலும் அவர உங்களுக்கு தெரியாது. அவர எந்த தொலைகாட்சியிலும் பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.

சீடன் : ஒரு குடும்பஸ்தனுக்கு எந்த அளவுக்கு ஆன்மிகம் தேவைப்படும்?

குரு : நீ டீ குடிக்கும்பொழுது, ஒரு கப் டீக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்து கொள்வியோ அந்த அளவிற்கு போதும். நாள் பூரா யோகா பண்ணிக்கிட்டு பஜனை பாடிகிட்டு இறை நினைப்போட இருக்கணும்னா அதுக்கு நீ சன்யாசியா இருக்கனும். சம்சாரிக்கு அது தேவை இல்லை.

சீடன் : அப்ப யோகா என்றால் என்ன ?

குரு : "Yoga is perfection". நீ செய்யற எல்லா விசயத்திலயும் பெர்பெக்டா இருந்தா அதுவே போதும். 

சீடன் : புரியல.

குரு : நீ ஒரு அப்பாவுக்கு பையனா இருந்தா, பெத்தவங்களுக்கு செய்ய வேண்டியது செய். குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தா அவங்களுக்கு செய்ய வேண்டியது செய். இந்த உலகத்தில உனக்கு என்ன ரோல் குடுகப்பட்டிருக்கோ  அத ஒழுங்கா செய். அது போதும். ஆனா செய்யும் போது எதையும் எதிர் பார்த்து  அப்பாகிட அது கிடைக்கும் பையன் கிட்ட இது கிடைக்கும்ன்னு செய்யாத. எதிர்பார்ப்பில்லாம செய்.முழு மனசோட செய்.அதுதான் யோகா.

சீடன் : அப்ப உங்கள பாக்க வர்றது, ஆசிரமத்தில தங்கணும்னு நினைக்க கூடாதா?

குரு : எப்பவும் ஏன், என் லங்கோட பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கணும்ன்னு நினைக்கிற?. என்ன ஒரு படிக்கல்லா நினைச்சு என் தோள் மேல மிதிச்சு ஏறிப்போ. ஆசிரமத்துக்கு வா, நான் சொல்லி தர்ற யோக பயிற்சிகளை  கத்துக்க, வீட்டுக்கு போய் பயிற்சி பண்ணி பாரு.உனக்கு சொல்லி குடுத்தாச்சு.அடுத்தவங்க காத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கும் சொல்லி குடுக்கணும். சந்தேகம் இருந்தா லெட்டர் எழுது.குருவுக்கு பின்னாடி சீடனும், சீடனுக்கு பின்னாடி குருவும் வரணும்ன்னு நினைக்காத. நான் சொல்லி தந்தத மட்டும் பிடிச்சிக்க, என்னை இல்ல. நான் இன்னிக்கு இருப்பேன், நாளைக்கு  இருக்க மாட்டேன். அப்ப யாரு பின்னாடி ஓடுவே?

பேச்சு தொடர்ந்தது..

சீடன் : எனக்கு  வர்ற நோய்களை, கஷ்டங்களை என்ன பண்றது?

குரு : அது உன் கர்மா. நீதான் அனுபவிக்கணும்.நீ என்ன நினைச்ச குருகிட்ட போனா அவரு கைய தூக்கி ஆசிர்வாதம் பண்ணா உன் கஷ்டம் போய்டும்ன்னு நினைச்சியா?. உன்கிட்ட எல்லா கர்மாவையும்  வாங்கி நான் எங்க போய் கழிக்கிறது? அப்படியே வாங்கினாலும், நீ மறுபடி கடைசி வரை யோக்கியமா இருப்பேன்னு என்ன நிச்சயம். மறுபடியும் சேற பூசிட்டு வந்து அத சுத்தம் பண்ண சொல்லுவ.போய் மக்களுக்கு சேவை பண்ணு. கர்மா கழியும்.அதுக்காக ஊரு ஊரா போக சொல்லலை. நீ சம்பாதிக்கிறதுல  பத்து சதவீதம் உன்னுடையது இல்லைன்னு நினைச்சுக்க. கஷ்டபடுரவன்களுக்கு குடு. மனசால எப்பவும் நல்லதே நினை. நல்லதே நடக்கும்.
  

போன வாரமே எழுதனும்னு நினைச்சேன். கொஞ்சம் நித்ய அலை ஓய்ந்த பிறகு பதிவிடுகிறேன்.

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

********************************************************





Wednesday, March 10, 2010

ஆயிரம் ரெண்டாயிரம் மூவாயிரம்...

கடந்த அக்டோபர் மாதம் பதிவு ஆரம்பித்தேன். இந்த ஐந்து மாதத்தில் பத்தாயிரம் ஹிட்ஸ். பட்டினத்தார்  போன்ற விசயங்களை எழுதினால் கடை காத்து வாங்குச்சு. சினிமா விமர்சனங்களும், நித்தியின் வாக்குமூலமும் அதிகம் பேர் வாசித்த பதிவுகள். ஆகவே மக்களே தொடர்ந்து மொக்கை பதிவுகளை அதிகமாக பதிய முடிவு செய்திருக்கிறேன்.
 தொடந்து பின் தொடர்பவர்களுக்கும், எனது ஏழே முக்கால் லட்சம் வாசகர்களுக்கும் நன்றி.

பின்குறிப்பு:- இந்த பத்தாயிரம் ஹிட்ச வச்சு என்ன பண்றது?. இத வச்சுக்கிட்டு யாராவது பத்தாயிரம் ரூபாய் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். அவ்வளவு தரமுடியாடியும், கொஞ்சம் குறைச்சு 9999 ரூபாய் குடுத்தாக்கூட போதும். பாத்து பண்ணுங்க.

Sunday, March 7, 2010

நித்யானந்தரின் முதல் வாக்குமூலம்..

நித்யானந்தரின் முதல் வாக்குமூலத்தை அவர்கள் இணையதளம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் உள்ள அவரின் கருணை பொங்கும் விழியையும், ஸ்லோகத்துடன் உரையை ஆரம்பிக்கும் தெளிவையும் பாருங்கள். அப்படியே எண்ணில் அடங்கா சிஷ்யகோடிகளின் புல்லரிக்கும் கமெண்ட்டையும் படியுங்கள். இவர்களின் மன நிலையை விளக்கும் "மனோதத்துவ" புத்தகம் ஏதும் யாராவது பரிந்துரை செய்தால் மகிழ்வேன். இந்த பரவச நிலை கமெண்ட்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=IO_6GkLekWY