Wednesday, October 28, 2009

நீங்கள் வாங்கும் உணவுப்பொருட்கள் தரமானதா ??


மனித உணவிற்காகத் தயாராகும் பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்கள், சுவை மணம் தரும் பொருட்கள் ஆகியவையும், குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாக்கட்ஃபாட்டில்களில் அடைக்கபபடும் குடிநீரையும்உணவுப்பொருட்கள்என 1954ம் வருட உணவுக்கலப்படத்தடைச்சட்டம் குறிப்பிடுகின்றது.

ஒவ்வொரு உணவுப்பொருளிற்கும், உணவுக்கலப்படத்தடைச்சட்டம் மற்றும் விதிகளில் தர நிர்ணயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு உணவுப்பொருளை பொட்டலங்களில் அடைத்து சந்தையில் விற்பனை செய்ய வேண்டுமானால், அந்தப் பொட்டல்கள் மீது குறிப்பிட வேண்டிய விபரங்கள் எவை எவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விவசாய விளைபொருட்கள் விற்பனைக்குஅக்மார்க்முத்திரை, பழங்கள் சார்ந்த பொருட்களுக்குFPO முத்திரை, குடிநீர் பாக்கட்ஃபாட்டில்களுக்கு BIS முத்திரை போன்றவையும் அவற்றின் தரத்தை குறிப்பிடுகின்றன.

விவசாய விளைபொருட்களிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களுக்குஅக்மார்க்ஆய்வுக்கூடங்களில் தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு. ‘அக்மார்க்தரச்சான்று வழங்கப்படுகின்றது. (.மா). மஞ்சள், தேன் போன்றவற்றிற்குஅக்மார்க்தரச்சான்று வழங்கப்படுகின்றது. ஆனால் உணவுக்கலப்படத்தடைச்சட்டம் மற்றும் விதிகளில்அக்மார்க்தரச்சான்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிர்ணயத்தை விட கூடுதல் தரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பழம் மற்றும் பழம் சார்ந்த பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களுக்கு FPO’ தர நிர்ணயச்சான்று வழங்கப்படுகின்றது. பழச்சாறு, ஊறுகாய் போன்ற பொருட்களுக்குFPO’ தரச்சான்று வழங்கப்படுகின்றது.

அகில இந்திய அளவில் ஒவ்வொரு பொருளிற்கும் ஒர தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த தர நிர்ணய அளவுகோளிற்குள் உள்ள உணவுப்பொருட்கட்டு, BIS தரச்சான்று வழங்கப்படுகின்றது. உணவுக்கலப்படத்தடைச்சட்டத்தி;ன் கீழ், பாக்கட்ஃபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் குடிநீருக்கு BIS தரச்சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்களை பொட்டலங்களில் விற்பனை செய்தால், அவை எந்த தேதியில் பொட்டலமாக்கப்பட்டது. அதற்குரிய குறியீட்டு (பேட்ஜ்) எண், எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது. அந்தப் பொருட்டலத்திலுள்ள உணவுப்பொருளின் பெயர் விபரம் சைவஃஅசைவ வகைப்பிரிவு ஆகியவை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட உணவுப்பொருள், பொட்டலமாக விற்பனை செய்யும் பொது, அதன் மீது குறியீட்டு (பேட்ஜ்ஃலாட் ) எண் என்று ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நிறுவனம் விற்பனைசெய்யும் பொட்டலத்தில் புகார் ஏதும் வந்தாலோ, குறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, அந்த எண் கொண்ட அத்தனை பொட்டலங்களையும் முடக்கி வைக்க இயலும். உதாரணமாக ஒரு பொட்டலத்தில் நச்சுப்பொருள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அதே குறியீட்டு எண் உடைய அத்தனை பொட்டலங்களையும் பொதுமக்கள் பயன்படுத்துவதிலிருந்து தவிர்க்க இயலும்.

ஒவ்வொரு உணவு பொருள் பொட்டலம் மீதும் அசைவ சைவ உணவு எனில், பச்சை சதுரத்தின் நடுவில் பச்சை வட்டமும், அசைவஉணவு எனில், அரக்கு சதுரத்தின் நடுவில் அரக்கு வட்டமும் கண்டிப்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதே போல் கதிர்வீச்சு மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் பொட்டலங்களில் பொதியப்பட்டே விற்பனை செய்யப்படவேண்டும். மேலும் அத்தகைய உணவுப்பொட்டலங்கள் மீது அதற்கென குறிப்பிடப்பட்ட முத்திரை , அதில் பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சு மற்றும் அதற்கான உரிமம் ஆகியவை பற்றி அச்சிட்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி, செய்யப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, இறக்குமதி செய்யும் நபரின் பெயர் மற்றும் முழவிலாசம் குறிப்பிடப்படவேண்டும். அதேபோல், இந்தியாவிற்கு வெளியில் தயாராகும். உணவுப்பொருளை இறக்குமதி செய்து, அதனை இந்தியாவில்பொட்டலமாக்கினாலோ, பாட்டில்களில் அடைத்தாலோ, அந்த உணவுப்பொருள் தயாரான இடம், அதனை இறக்குமதி செய்த நபரின் பெயர் மற்றும் முழவிலாசம் , இந்தியலாவில் பொட்டலமாக்கப்படும் இடம் ஆகிய விபரங்களை கண்டிப்பாக அச்சிட்ட பின்னரே விற்பனை செய்ய முடியும்.
நாம் உண்ணும் உணவுப்பொருள் தரமானதுதானா, நமது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்குமா என்று ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இத்தகைய விபரங்கள் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம் உண்ணும் உணவு, நம் உடல் நலத்திற்கு உற்ற துணையாக இல்லாமல் ஊறு விளைவிப்பதால் அமைந்து விடக்கூடாது. நாம் உண்ணும் உணவே, உடலிற்கு நஞ்சாகிவிடக்கூடாது என்றநோக்கமே இதற்கான காரணங்கள் ஆகும்.

உணவுப்பொருட்களில் கீழ்கண்ட நஞ்சுப்பொருட்கள் சேர்ந்து அவற்றை நஞ்சாக்குகின்றன:
1. நுண்கிருமிகள்;
2. மிருகங்களிடமிருந்து வரும் நோய்க்கிருமிகள்
3. ஒட்டுண்ணிகள்
4. தாவரங்களிலிருந்து வரும் நஞ்சு.
5. பூச்சிக்கொல்லி மருந்து படிவங்கள்.(D.D.T., B.H.C., Aldrin, Diealdrin, etc)
6. மிருகங்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளின் படிவங்கள் (.ம்: மாடுகள் அதிக பால் கொடுக்கப் பயன்படுத்தும்ஆக்ஸிடோஸின் “)
7. கால்நடைகள் உண்ணும் சுவரொட்டிகளிலிருந்து பால் மூலம்; மனித உடலில் தீங்கு விளைவிக்கும்
8. கலப்படப் பொருட்கள் (கேசரிப்பருப்பு முடக்கு வாதம் விளைவிக்கின்றது.)

உங்களுக்குத் தெரியுமா?
1. நாம் அன்றடாம் பயன்படுத்தும் சமையல் உப்பு அயோடின் கலந்து தான் விற்பனை செய்யப்படவேண்டும்.
2. மசாலாப்பொடிகள் பொட்டலப்பொருளாக மட்டுமே விற்பனை செய்யப்படவேண்டும்.
3. பொதுமக்கள்ஃநுகர்வோர் அமைப்புக்கள் கலப்படமென சந்தேகப்படும் உணவு பொருட்களை உணவுமாதிரியாக எடுத்து அனுப்பலாம்.
4. குழந்தை உணவு டின்கள் மீதுதாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்ததுஎன பெரிய எழுத்துக்களில் கண்டிப்பாக அச்சிடப்படவேண்டும்.
5. காபித்தூளில் சிக்கரி 49 சதத்திற்கு மேல் சேர்த்து விற்பனை செய்யக்கூடாது
6. இனிப்பு விற்பனை செய்யும் லாலாக்கடைகளில் அந்த இனிப்பு தயாரிக்க பயன்படுத்திய எண்ணெய்ஃநெய் விபரம் குறித்து அறிவிப்புப்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

BIS - Bureau of Indian Standards (http://india.gov.in/outerwin.php?id=http://www.bis.org.in/cert/procert.htm)

***********************************************************************************
கட்டுரையாளர்
.ரா.சங்கரலிங்கம்,B.Sc.,M.A.,D.L.,D.P.H.,
உணவு ஆய்வர்,
திருநெல்வேலி மாநகராட்சி.
***********************************************************************************


Wednesday, October 21, 2009

கூகிளின் ஆளுக்கேற்ற ஜால்ரா அல்லது அல்லகைத்தனம்

அருணாச்சல மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் துளி யளவும் சந்தேகம் ஏற் படக்கூடாது,'' அம்மாநில முதல்வர் டோர்ஜி காண்டு

அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனா முழுமை யாக அறியும். இந்த உலகில் எந்த சக்தியாலும் அதை பறிக்க முடியாது,'' இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி

வரலாற்று உண்மைகள் தொடர்பாக எதையும் கவனிக்காமல், இந்தியா வெளியிட்ட கருத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்தியசீன எல்லைக்கோடு அதிகாரபூர்வமாக இதுவரை வகுக்கப்படவில்லை. இருநாடுகளும் தங்கள் எல்லைப் பிரச்னையில் இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை. இருப்பினும், சீன இந்திய கிழக்கு எல்லை குறித்து சீனா தன்னுடைய கருத்தில் தெளிவாகவே இருக்கிறது சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாஜாவோஜூ
அருணாச்சல பிரதேசம் எங்களுக்கே என்று ஆளாளுக்கு அடித்து கொண்டிருக்கும் நிலையில் கிடக்கிறது கிடக்கு கிழவிய தூக்கி மனைல வை என்று கணக்காக செயல்பட்டிருக்கிறது கூகிள்.பல்வேறு இணைய தள சேவைகளை வழங்கி வரும் கூகிள் நிறுவனம் கூகிள் மேப்ஸ் என்ற சேவையையும் வழங்கி வருகிறது.


இந்தியாவையும் சீனாவையும் மிக பெரிய மார்கெட்டாக கருதும் கூகிள, இரண்டு நாட்டையும் பகைத்து கொள்ள விரும்பாத கூகிள், அருணாச்சல பிரதேச விவகாரத்தில் ஆளுக்கேற்ற ஜால்ரா அடித்துள்ளது

அருணாச்சல பிரதேசத்தை இந்திய கூல் தளத்தில் இந்தியாவுடனும், சீன கூகிள் தளத்தில் சீனாவுடனும், பொதுவான கூகிள்.காமில் ஏ பியை விவகாரமான பிரதேசமாகவும் காட்டியுள்ளது.

பல்வேறு சேவைகளை வழங்கி வரும் கூகிள் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் நல்ல எதிர் காலம் உண்டு.
அருணாச்சல பிரதேசத்தை அந்த அருணாசலம்தான் காப்பாற்ற வேண்டும்.

Wednesday, October 14, 2009

மூத்த மற்றும் பிரபல பதிவர்களுக்கு நன்றி நவிலல்....

எத்தனை நாள்தான் படித்து கொண்டிருப்பது.. என் உள்ளகிடங்க்கில் ஊருகின்ற புரட்சி எண்ணங்களை இந்த புத்திகெட்ட சமுதாயத்தில் விதைத்து, ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணி , இந்த சமுதாயத்துக்கு நாமும் ஏதாவது செய்யணும் பாஸ் (நன்றி வார்த்தை உபயம் : நர்சிம்) ... அப்படின்னு நினைச்சு இந்த புண்ணிய ப்ளாக ஆரம்பிச்சா கடை விரித்தேன் கொள்வாரில்லை...
இடி விழுந்தது போல் ஆனது இதயம்...
அந்த நேரத்தில் தூரத்தில் தெரிந்தது ஒரு ஒளி கீற்று....
பிரபல பதிவர் வால் பையன் முதல் கம்மென்டிட்டு ஆரம்பிச்சு வைக்க, பின்னாடியே பிரபல பதிவர் அப்துல்லாவும் வழி மொழிய... பொறவு நாம கூச்சமே இல்லாம போய் கூப்டதினாலே அண்ணாச்சி ஆஸிப் மீரான் அவர்களும் வந்து மொய் செஞ்சுட்டு போனாக மக்கா...

என்னை மேலும் உற்சாகம் ஊட்டும் விதத்தில் பிரபல பதிவர் தேவன் மாயம் என் முதல் பின்தொடற்பவரா சேர்ந்தே விட்டார்....

இவங்களுக்கு எல்லாம் கண்கள் இனிக்க நெஞ்சம் பணிக்க நன்றி சாமியோவ்....

Monday, October 12, 2009

எறும்பு


எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இது உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. 2006 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன.